படைப்பின் இரகசியம்
பிறக்கும் போது குழந்தை அழும். ஆனால், மற்றவர்கள் சிரிப்பார்கள்.
இறந்தபின் மற்றவர்கள் அழுவார்கள். ,ஆனால் பிணம் சிரிப்பது போல் இருக்கும்.
பொதுவாக பிறப்பை இன்பமென்றும், இறப்பை துன்பமேன்றும் கூறுவார்கள்.
உண்மையில் இப்புவியில் வாழும் எல்லோருமே ( உங்களை தவிர) ஏன்தான் பிறந்தோமோ என்று நொந்து வாடும் பொழுது , இன்னொருத்தன் புதிதாய் பிறந்திருக்கிறான் என்று தெரிந்ததும் ஆகா, நமக்கு துணையா இன்னொருத்தனும் வந்துட்டான் என்று சிரிக்கிறார்கள். ஆனால், புதிதாய் பிறந்தவன் அதை தெரிந்து கொண்டு இந்த பூமியில என்ன என்ன கஷ்டத்த எல்லாம் அனுபவிக்க போறோமோ என்று அழுகிறான்.
.
அதை போன்று தான் ஒருவன் இறக்கும் போது , மற்றவர்கள் ஆகா, நம்மல விட்டுட்டு அவன்மட்டும் தப்பிச்சுட்டான்டா என்று அழுகிறார்கள் ,ஆனால் செத்தவனோ அப்பா இந்த பூமில கெடந்து கஷ்டபடாம இதோட நம்ம கதை முடிஞ்சது என்று சிரித்த முகத்தோடு இறக்கிறான்.