அன்புள்ள சுஜாதாவிற்கு,

ஒரு வரி கதை
உலகத்தின் கடைசி மனிதன் உறங்கும் போது கதவை தட்டுவது ...... கனவு.

தூக்கம்

உறக்கம்
நச்னு, நாலு மணி நேரம்,
அசந்து, அஞ்சு மணி நேரம்,
ஆரவாரம் இல்லாம, ஆறு மணி நேரம்,
ஏன் எழுந்திரிக்கனுமான்னு? ஏழு மணி நேரம்,
எழுந்திரிக்க மனசே இல்லாமல் எட்டு மணி நேரம்,
ஒரே பிடிவாதமா , ஒன்பது மணி நேரம்,
பட்டும் படமா ,பத்து மணி நேரம்,
பயமே இல்லாமல், பதினோரு மணி நேரம்,
பயனே இல்லாமல், பன்னிரண்டு மணிநேரம்.

தேடல்...

உண்ண இறைதேடல்,
உன்னத இறைத்தேடல்.

ஊதியம்

உழைப்புக்கேற்ற
ஊதியம்
நிச்சயம்
கிடைக்கும்,
உழைத்துக்கொண்டே
இருப்பவர்களுக்கு.








கற்றபின் நிற்க

எவ்வளவு கற்றோம் என்பதை விட,
கற்றதின்படி எவ்வளவு நின்றோம் என்பதுதான் சிறப்பு.
தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு.
பொதுநலனுக்காக செய்த தவறுக்கு பிராயசித்தம்.
சுயநலனுக்காக செய்த தவறுக்கு ...

கடவுள் என்பதே நம்பிக்கை.

ஒரு செயலை செய்ய,

99 % தன்னம்பிக்கையும் ,1% (கடவுள்) நம்பிக்கையும் வேண்டும்.
இல்லையெனில்,

100% தன்னம்பிக்கை வேண்டும்.