Tamil Blogs Traffic Ranking

கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க

கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க 

கணவன், மனைவி சொல்வதை கேட்டால் 
அந்த கணவனுக்கு மட்டும் நல்லது .

மனைவி, கணவன் சொல்வதை கேட்டால் 
அந்த குடும்பத்திற்கே நல்லது.

கணவன், மனைவி சொல்வதை கேட்டால் 
அந்த குடும்பத்திற்கு  மட்டும் நல்லது .

மனைவி, கணவன் சொல்வதை கேட்டால் 
அந்த வம்சத்திற்கே  நல்லது.

கணவன், மனைவி சொல்வதை கேட்டால் 
அந்த வம்சத்திற்கு   மட்டும் நல்லது .

மனைவி, கணவன் சொல்வதை கேட்டால் 
அந்த ஊருக்கே   நல்லது.

கணவன், மனைவி சொல்வதை கேட்டால் 
அந்த ஊருக்கு   மட்டும் நல்லது .

மனைவி, கணவன் சொல்வதை கேட்டால் 
அந்த நாட்டுக்கே    நல்லது.

கணவன், மனைவி சொல்வதை கேட்டால் 
அந்த நாட்டுக்கு  மட்டும் நல்லது .

மனைவி, கணவன் சொல்வதை கேட்டால் 
இந்த உலகத்துக்கே    நல்லது.

ஆசை

ஆசை


கவிதை எழுத ஆசை


எனக்கும் கவிதை எழுத ஆசை

ஆனால்

ஆசைதான்

துன்பத்திற்கு காரணம்

நம் ஆசைதான்

பிறர் துன்பத்திற்கு காரணம்

என்று

புத்தர் சொன்னதால்

புத்தரே சொன்னதால்

விட்டேன்

கிள்ளிவிட்டேன்

முளையிலேயே கிள்ளிவிட்டேன்

அவ்வாசையை

அதனால்

பிறருக்கு

இன்பம்

ஆனால்

ஆனால்

என்னுள் உறங்கும் கவிஞனுக்கோ

துன்பம்

மிகத்துன்பம்.
வாழ்கை வாழ் + கை உன் கையில் உள்ளதை வைத்து மகிழ்சியாக வாழ்வது உண்மையான வாழ்கை.

உவகை

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனுக்கு
தானே வரன்பார்க்கும் தாய்.

தீயவர்

என்றோ தவறி செய்தவர் தீயவர் அல்ல,
இன்றும் தவறை செய்பவர்தான் தீயவர்.

கற்பனையே - நிர்வாகம் பொறுப்பல்ல

கற்பனையே - நிர்வாகம் பொறுப்பல்ல
அப்பா ஏழையாக இருந்தால் நாமும் ஏழை,
மாமனார் ஏழையாக இருந்தால் நாம் ஏமாளி.
அப்பா ஏழையாக இருந்தால் திருமணம் வரை சிரமம்,
மாமனார் ஏழையாக இருந்தால் மரணம் வரை சிரமம்.